You are not connected. Please login or register

Post-#19/5/2014, 5:49 pm

Aditya Sundar

JOIN TODAY

பிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள் Empty பிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள்


சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தினி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

இதில் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

மொத்த மதிப்பெண்களில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சுசாந்தினி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார். ஸ்ருதியின் மொத்த மதிப்பெண்கள் 1,190 ஆகும்.

இதேபோல் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவன் அஸ்வத் 198 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1187 ஆகும்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum