சென்னை: கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் மே 26ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஜரானால் அங்கேயே அவர் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக கலங்கிப் போயுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
அதே நேரத்தில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate), அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் தனியே ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணைக்கு மே 26ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அனைவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது டெல்லி நீதிமன்றம்.
முந்தைய சிபிஐ வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவரை சாட்சியமளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் தயாளு அம்மாளுக்கு அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் ஏற்க மறுத்து ஆஜராக உத்தரவிட்டது.
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் சென்னையில் அவரது வீட்டிலேயே சாட்சியம் பெறப்பட்டது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.
அதே நேரத்தில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate), அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் தனியே ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணைக்கு மே 26ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அனைவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது டெல்லி நீதிமன்றம்.
முந்தைய சிபிஐ வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவரை சாட்சியமளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் தயாளு அம்மாளுக்கு அல்சைமர் எனும் மறதி நோய் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் ஏற்க மறுத்து ஆஜராக உத்தரவிட்டது.
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் சென்னையில் அவரது வீட்டிலேயே சாட்சியம் பெறப்பட்டது.