You are not connected. Please login or register

Post-#15/5/2014, 4:26 pm

Aditya Sundar

JOIN TODAY

கோடையில் நிரம்பிய வீராணம் ஏரி!: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது!! Empty கோடையில் நிரம்பிய வீராணம் ஏரி!: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது!!


கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. மேலும், வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், கோடை முழுவதும் சென்னைக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் கோடை காலத்தில் இந்தளவு தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு அதிக அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

இதையடுத்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து கீழணை மூலமாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால், கோடையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, அந்த நிலை மாறியுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

சென்னையின் குடிநீர் தேவையை சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெமிலி கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து தென்சென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பெய்து வரும் கோடைமழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஞாயிறு மாலை நிலவரப்படி 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 20.69 அடி நீர் இருப்பும், 17.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 4 மில்லியன் கன அடி தண்ணீரும், 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 12.92 அடி தண்ணீரும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 960 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. 8.50 அடி கொண்ட வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ஏரியும் காலத்திலும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum