ஹைதராபாத்: இமாச்சலபிரதேசத்தில் பியாஸ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 50 பேர் கல்வி சுற்றுலாவாக இமாசலபிரதேச மாநிலத்துக்கு சென்றனர். அவர்களில் 24 பேர் நேற்று மாலை மனாலி-கிராப்துர் சாலையில் உள்ள தலாட் என்ற இடத்தில் உள்ள பியாஸ் ஆற்றின் கரையோரமாக நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பியாஸ் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதில் ஆற்றின் அருகே நின்று படம் எடுத்துக்கொண்டிருந்த 18 மாணவர்களும், 6 மாணவிகளும் என மொத்தம் 24 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக அவர்களை தேடும் பணியில் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் காணாமல் போன 18 மாணவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்றாலும் சீமாந்திரா அரசு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. இறந்த மாணவர்களின் உடல்கள் இமாசல பிரதேசத்திலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுவர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு நேற்று நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜாபதி ராஜீ மற்றும் மாநில அமைச்சர் நாராயணா ஆகியோரிடம் பேசி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை நீட்டிக்குமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இமாச்சல பிரதேச விபத்தில் பலியான என்ஜினீயரிங் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 50 பேர் கல்வி சுற்றுலாவாக இமாசலபிரதேச மாநிலத்துக்கு சென்றனர். அவர்களில் 24 பேர் நேற்று மாலை மனாலி-கிராப்துர் சாலையில் உள்ள தலாட் என்ற இடத்தில் உள்ள பியாஸ் ஆற்றின் கரையோரமாக நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பியாஸ் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதில் ஆற்றின் அருகே நின்று படம் எடுத்துக்கொண்டிருந்த 18 மாணவர்களும், 6 மாணவிகளும் என மொத்தம் 24 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக அவர்களை தேடும் பணியில் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் காணாமல் போன 18 மாணவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்றாலும் சீமாந்திரா அரசு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. இறந்த மாணவர்களின் உடல்கள் இமாசல பிரதேசத்திலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுவர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு நேற்று நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜாபதி ராஜீ மற்றும் மாநில அமைச்சர் நாராயணா ஆகியோரிடம் பேசி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை நீட்டிக்குமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இமாச்சல பிரதேச விபத்தில் பலியான என்ஜினீயரிங் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளார்.