You are not connected. Please login or register

Post-#130/5/2014, 9:34 am

Aditya Sundar

JOIN TODAY

அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... தயாரிப்பாளர், இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீசார்! Empty அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... தயாரிப்பாளர், இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீசார்!


சென்னை: அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட்டுவிட்டனர்.

வீரம்' படத்துக்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இன்னமும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றிலும் நடக்கிறது.

பாலவாக்கத்தில் உள்ள வி.ஜ.பி. லேஅவுட் காலனியில் கடந்த சில நாட்களாக அஜீத் படப்பிடிப்பு நடந்தது. பெரும்பாலும் இரவில்தான் படப்பிடிப்பு.

ஷூட்டிங்குக்காக சாலையில் நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிக வெளிச்சம் பொருந்திய விளக்குகளை வைத்து படப்பிடிப்பை நடத்தினர்.

இரைச்சல் மற்றும் அதிக வெளிச்சத்தால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்தார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். எதற்கெடுத்தாலும் போலீஸுக்குப் போகிறவர்கள் அல்லது ஆங்கிலுப் பத்திரிகைகளின் லெட்டர் டு த எடிட்டர் பகுதியின் பங்களிப்பாளர்கள்.

எனவே படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீலாங்கரை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

போலீசார் நேரில் சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை போலீசார் நிறுத்தினர்.

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தயாரிப்பு மேலாளர் பிரேம், லைட் பாய் ரமேஷ் மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தையோ, இயக்குநர் கவுதம் மேனனையோ ஒரு கேள்வி கூட கேட்கவில்லை போலீசார்!

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum