You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:24 am

Aditya Sundar

JOIN TODAY

33 மீனவர்கள் கைது: சார்க் தலைவர்களை அழைத்தது வெற்றியா வைகோ அன்ட் கோ?- கார்த்தி சிதம்பரம் Empty 33 மீனவர்கள் கைது: சார்க் தலைவர்களை அழைத்தது வெற்றியா வைகோ அன்ட் கோ?- கார்த்தி சிதம்பரம்


சென்னை: தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரி என்று நினைப்பதா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பதவியேற்பு விழாவுக்கு இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வரும் முன்பு அந்நாட்டு சிறையில் உள்ள 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 33 பேரை நேற்று கைது செய்துள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

33 தமிழக மீனவர்ளை இலங்கை கைது செய்துள்ளது. அப்படி இருந்தும் சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது வெற்றி என்று நினைப்பதா? என்ன சொல்கிறீர்கள் வைகோ அன்ட் கோ? என்று தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum