டெல்லி: யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றையும் பாடமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனது வாழ்க்கை வரலாற்றையும் பாட நூலில் சேர்ப்பதை நான் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் பாடமாக வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு மோடியின் வாழ்க்கையை பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், சில மாநில அரசுகள் எனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பாடமாக வைக்க விரும்புவதாக அறிகிறேன். அதை நான் விரும்பவில்லை.
தனிப்பட்ட மனிதர்களின், குறிப்பாக உயிருடன் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் வைப்பதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அதைப் பாடமாக போதிப்பது பொருத்தமாகவும் இருக்காது.
இந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர். மகான்கள் இருந்துள்ளனர். அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் விதைகள். அவர்களைப் பற்றித்தான் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டு அவர்களைப் போல நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.
குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்தர்சின்ஹ் சுடாஸ்மா நேற்று கூறுகையில், மோடியின் வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு பள்ளிப் பாடமாக வைக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மத்தியப் பிரதேச அரசும் மோடி வாழ்க்கைப் பாடம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது.
அதேபோல ராஜஸ்தானும் மோடி வாழ்க்கையை பாடநூலில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாய் வாழ்க்கையையும் பாடமாக்க அது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் பாடமாக வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு மோடியின் வாழ்க்கையை பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், சில மாநில அரசுகள் எனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பாடமாக வைக்க விரும்புவதாக அறிகிறேன். அதை நான் விரும்பவில்லை.
தனிப்பட்ட மனிதர்களின், குறிப்பாக உயிருடன் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் வைப்பதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அதைப் பாடமாக போதிப்பது பொருத்தமாகவும் இருக்காது.
இந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர். மகான்கள் இருந்துள்ளனர். அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் விதைகள். அவர்களைப் பற்றித்தான் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டு அவர்களைப் போல நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.
குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்தர்சின்ஹ் சுடாஸ்மா நேற்று கூறுகையில், மோடியின் வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு பள்ளிப் பாடமாக வைக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மத்தியப் பிரதேச அரசும் மோடி வாழ்க்கைப் பாடம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது.
அதேபோல ராஜஸ்தானும் மோடி வாழ்க்கையை பாடநூலில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாய் வாழ்க்கையையும் பாடமாக்க அது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.