டெல்லி: சிபிஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வீணானது என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.
சிபிஐயில் இணை இயக்குநராக 1999-2006ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் அர்ச்சனா. 2006ஆம் ஆண்டு தமிழகப் பணிக்கு திரும்பினார். இவரது கணவர் ராமசுந்தரம் திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை செயலராக பணியாற்றினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ராமசுந்தரம் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். அர்ச்சனாவோ, மீண்டும் மத்திய பணிக்கு திரும்ப மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில்தான் சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியிடம் காலியாகிறது. இந்த பணியிடத்துக்கு அர்ச்சனா ராமசுந்தரம், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அசோக்குமார், மேற்கு வங்க அதிகாரி பச்சானந்தா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
மேற்கு வங்க அதிகாரியான பச்சானந்தா ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். அவர் கொல்கத்தா மாநகர கமிஷனராகவும் பணிபுரிந்தார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதாவுடனான மோதலால் அவரும் மத்திய பணிக்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தவர்.
சிபிஐ அதிகாரிகள் நியமனத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ இணைந்து முடிவெடுக்க வேண்டும். இதில் சிபிஐ தரப்பு அர்ச்சனா ராமசுந்தரத்தை கூடுதல் இயக்குநராக்க பரிந்துரைத்தது. ஆனால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும் உள்துறை அமைச்சகமும் இதை ஏற்கவில்லை.
சிபிஐயில் இணை இயக்குநராக 1999-2006ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் அர்ச்சனா. 2006ஆம் ஆண்டு தமிழகப் பணிக்கு திரும்பினார். இவரது கணவர் ராமசுந்தரம் திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை செயலராக பணியாற்றினார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ராமசுந்தரம் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். அர்ச்சனாவோ, மீண்டும் மத்திய பணிக்கு திரும்ப மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில்தான் சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியிடம் காலியாகிறது. இந்த பணியிடத்துக்கு அர்ச்சனா ராமசுந்தரம், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அசோக்குமார், மேற்கு வங்க அதிகாரி பச்சானந்தா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
மேற்கு வங்க அதிகாரியான பச்சானந்தா ஏற்கெனவே எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். அவர் கொல்கத்தா மாநகர கமிஷனராகவும் பணிபுரிந்தார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதாவுடனான மோதலால் அவரும் மத்திய பணிக்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தவர்.
சிபிஐ அதிகாரிகள் நியமனத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ இணைந்து முடிவெடுக்க வேண்டும். இதில் சிபிஐ தரப்பு அர்ச்சனா ராமசுந்தரத்தை கூடுதல் இயக்குநராக்க பரிந்துரைத்தது. ஆனால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும் உள்துறை அமைச்சகமும் இதை ஏற்கவில்லை.