மாப்பு... வச்சிட்டான்யா ஆப்பு... - இந்த ஒரு வரி வசனத்தில் தியேட்டரையே கலகலக்க வைத்தவர்கள் ரஜினியும் வடிவேலுவும்.
தமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஏக முக்கியத்துவம் கொடுத்து காமெடிக் காட்சிகளை அமைக்கச் சொல்லியிருந்தார் ரஜினி.
அந்த அளவு வடிவேலு காமெடியை ரசித்தவர் அவர். அடுத்து வந்த சிவாஜியில் விவேக்கைச் சேர்த்துக் கொண்டவர், மீண்டும் ராணாவில் வடிவேலுவைச் சேர்க்க நினைத்தார்.
ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. வடிவேலுவும் தேர்தல் நேரத்தில் சில தவறான கமெண்டுகளை அடிக்க, இனி அவர் ரஜினியுடன் நடிப்பது சந்தேகம் என்றானது.
இப்போது லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் வடிவேலு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்துக்கு வடிவேலுவிடம் 30 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர் லிங்கா குழுவினர். வடிவேலுவும் இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம்.
தெனாலிராமனுக்குப் பிறகு, வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது ரஜினி பட வாய்ப்பு வந்திருப்பதால், லிங்காவில் நடித்துவிட்டு, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம்.
ரஜினியுடன் வடிவேலு முதல் முதலில் நடித்தது முத்து படத்தில். அந்தப் படத்துக்குப் பிறகு சந்திரமுகியில் நடித்தார். பின்னர் குசேலனிலும் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தனர். இப்போது நான்காவது முறையாக ரஜினியுடன் இணைகிறார்.
தமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஏக முக்கியத்துவம் கொடுத்து காமெடிக் காட்சிகளை அமைக்கச் சொல்லியிருந்தார் ரஜினி.
அந்த அளவு வடிவேலு காமெடியை ரசித்தவர் அவர். அடுத்து வந்த சிவாஜியில் விவேக்கைச் சேர்த்துக் கொண்டவர், மீண்டும் ராணாவில் வடிவேலுவைச் சேர்க்க நினைத்தார்.
ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. வடிவேலுவும் தேர்தல் நேரத்தில் சில தவறான கமெண்டுகளை அடிக்க, இனி அவர் ரஜினியுடன் நடிப்பது சந்தேகம் என்றானது.
இப்போது லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் வடிவேலு என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்துக்கு வடிவேலுவிடம் 30 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளனர் லிங்கா குழுவினர். வடிவேலுவும் இந்த அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம்.
தெனாலிராமனுக்குப் பிறகு, வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது ரஜினி பட வாய்ப்பு வந்திருப்பதால், லிங்காவில் நடித்துவிட்டு, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம்.
ரஜினியுடன் வடிவேலு முதல் முதலில் நடித்தது முத்து படத்தில். அந்தப் படத்துக்குப் பிறகு சந்திரமுகியில் நடித்தார். பின்னர் குசேலனிலும் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் தந்திருந்தனர். இப்போது நான்காவது முறையாக ரஜினியுடன் இணைகிறார்.