முன்னாள் ஆபாசப் பட நடிகையும், இந்நாள் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் சமீபத்தில் வைர வியாபாரிகள் நடத்திய மது விருந்தில் நிர்வாணமாக ஆட்டம் போட்டதாக செய்திகள் வெளியாகின.
அது தொடர்பான படங்களும் வீடியோவும் வெளியாகி பரபரப்பு கிளப்பின. ரூ 40 லட்சம் பெற்றுக் கொண்டு, இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தை சன்னி லியோன் ஆடியதாகக் கூறப்பட்டது.
ஆனால் இதனை கடுமையாக மறுத்திருந்தார் சன்னி லியோன். அந்த நாளில் தான் ஒரு நகைக்கடை திறப்புக்குப் போனதாகக் கூறினார். அந்தப் படங்கள் அனைத்தும் மார்ப்பிங் செய்யப்பட்டவை என்றார். வீடியோவும் போலி என்றார். மேலும் தன்னை பாலிவுட்டிலிருந்து ஒழிக்க சூழ்ச்சி நடப்பதாகக் கூறினார்.
ஆனால் இந்த மதுவிருந்து, நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோனிடம் விசாரணை நடத்தவும் புனே போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் நிர்வாண நடன வீடியோவில் இருக்கும் பெண் சன்னி லியோன்தானா என்பதைக் கண்டறிய வீடியோ பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர்.
இந்த நிர்வாண நடன சர்ச்சை, தொடரும் போலீசார் விசாரணை போன்றவற்றால் சன்னி லியோன் அதிர்ச்சியடைந்துள்ளார்.