சென்னை: ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து நாய் கண்காட்சி நடத்தவும் தடை வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை மாடுகள் சித்ரவதைக்கும், கொடுமைக்கும் ஆளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியம்மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
அதைத்தொடர்ந்து சேவல் சண்டையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேவல் சண்டைக்கு தமிழக அரசு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து விளையாட்டு ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் அடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டியின்போது நாய் மற்றும் குதிரைகளை அவற்றின் பயிற்சியாளர்களும், உரிமையாளர்களும் மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பயிற்சியின்போது சூடு வைத்து மிரட்டி பணிய வைக்கின்றனர்.
போட்டியின்போது நாய்கள் நீண்டநேரம் தனது உடலை வருத்தி பல சாகசங்களை செய்து காட்டுகிறது. அதனால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
மேலும் என்ன காரணத்துக்காக நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது என தெரியவில்லை. அதனால் பல பரிசு பொருட்கள் மற்றும் பணம் சம்பாதிப்பது அவற்றின் உரிமையாளர்கள்தான்.
எனவே நாய் கண்காட்சிக்கும் தடை விதிக்க வேண்டும். குதிரை பந்தயத்தையும் நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டையை தொடர்ந்து நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை மாடுகள் சித்ரவதைக்கும், கொடுமைக்கும் ஆளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியம்மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
அதைத்தொடர்ந்து சேவல் சண்டையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேவல் சண்டைக்கு தமிழக அரசு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து விளையாட்டு ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் அடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டியின்போது நாய் மற்றும் குதிரைகளை அவற்றின் பயிற்சியாளர்களும், உரிமையாளர்களும் மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பயிற்சியின்போது சூடு வைத்து மிரட்டி பணிய வைக்கின்றனர்.
போட்டியின்போது நாய்கள் நீண்டநேரம் தனது உடலை வருத்தி பல சாகசங்களை செய்து காட்டுகிறது. அதனால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
மேலும் என்ன காரணத்துக்காக நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது என தெரியவில்லை. அதனால் பல பரிசு பொருட்கள் மற்றும் பணம் சம்பாதிப்பது அவற்றின் உரிமையாளர்கள்தான்.
எனவே நாய் கண்காட்சிக்கும் தடை விதிக்க வேண்டும். குதிரை பந்தயத்தையும் நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டையை தொடர்ந்து நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.