You are not connected. Please login or register

Post-#13/6/2014, 7:16 am

Aditya Sundar

JOIN TODAY

வருமான வரி வழக்கு: 9-ந் தேதி ஜெ. ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு! Empty வருமான வரி வழக்கு: 9-ந் தேதி ஜெ. ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு!


சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் வரும் 9-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 - 92 மற்றும் 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகளை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் முறையிடப்பட்டது.

ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க ஜனவரியில் உத்தரவிட்டது.

அதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா விலக்கு பெற்று வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வரும் 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum