You are not connected. Please login or register

Post-#12/6/2014, 8:27 am

Aditya Sundar

JOIN TODAY

ஆசிரியரின் சில்மிஷம் தாங்காமல் தீக்குளித்த மாணவி - மருத்துவமனையில் அனுமதி Empty ஆசிரியரின் சில்மிஷம் தாங்காமல் தீக்குளித்த மாணவி - மருத்துவமனையில் அனுமதி


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்த, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.

இதை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்து ஆசிரியர் சந்திரசேகர் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் கெரசின் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum